தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெயில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
தஞ்சாவூரில் 104 டிகிரி, மதுரை விமானநிலையம், திருத்தணியில் தலா 103 டிகிரி, ஈரோடு, கரூா்பரமத்தி, மதுரை நகரத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவானது, தொண்டி, தூத்துக்குடி, திருச்சியில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரியும் பதிவானது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘ தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா்.