அடுத்தடுத்த தேர்தல்களிலும் திமுகதான் வெல்லும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்கள் போல் அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெல்லப்போவது திமுகதான் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
அடுத்தடுத்த தேர்தல்களிலும் திமுகதான் வெல்லும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்கள் போல் அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெல்லப்போவது திமுகதான் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்குப் பயனுள்ள அரசை - மக்களுக்காக நடைபெறும் இந்த மக்களரசின் நலத்திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் - எங்கள் முதல்வர் தலைமையிலான நல்லாட்சியைக் குறை கூறியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட மாடல் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளைச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருவரின் முகத்திற்கு முன்னால் வைத்து முதல்வர் நேருக்கு நேர் விளக்கியுள்ளார். அப்படி பழனிசாமி ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் விளக்க முடிந்ததா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

தமிழ்நாட்டை ஒருபுறம் கடனிலும், இன்னொரு புறம் மோசமான நிர்வாகச் சீரழிவிலும் விட்டுச்சென்ற முன்னாள் முதல்வர், இந்த ஆட்சியின் சாதனைகளை மறுக்க முடியாமல் - வெறுப்பைக் கக்குகிறார். 

புத்தம் புதிய திட்டங்கள் - கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் உடனுக்குடன் நிறைவேற்றம் எனப் பல்வேறு சாதனைகளை ஓராண்டில் செய்திருப்பதுதான் எங்கள் முதல்வர் தலைமையிலான அரசு. ஓராண்டில் வந்துள்ள தொழில் முதலீடுகளை - நான்கு ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பழனிசாமி ஈர்க்கவில்லை. 

ஒளிவு மறைவு மிகுந்த 10 ஆண்டு இருண்ட ஆட்சியை அகற்றி விட்டு ஓராண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு  நடைபெறும் ஒரு வெளிப்படையான ஆட்சி! - இதுதான் எங்கள் முதல்வர் அளித்து வரும் திராவிட மாடல் ஆட்சி. இதைக் குடியரசு துணைத் தலைவரே பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு - மோசமான, ஊழல் மிகுந்த, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஆட்சியை வழங்கி - தமிழ்நாட்டையும் - அதன் வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளிய பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் - கொடநாடு வழக்கின் “க்ளைமாக்ஸ்” காட்சி நெருங்குவது பற்றிய பயத்திலோ என்னவோ – தி.மு.க. மீதும் - நல்லாட்சி மீதும் - எங்கள் முதல்வர் மீதும் ஆதாரமற்ற -  அபாண்டமான - வெத்து வேட்டு பேட்டி - அறிக்கைகளை விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் ஆட்சி துவங்கி ஓராண்டுதான் நிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் பத்தாண்டு ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளைக காற்றில் பறக்க விட்டுப் போன “இரட்டைத் தலைமைக்கு” எங்கள் ஆட்சி ஓராண்டிலே நிறைவேற்றி விட்ட வாக்குறுதிகளைப் பொறுத்துக் கொள்ளாமல் இப்படி பொய் அறிக்கைகளை வெளியிடுவது - தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எத்தனைப் பொய்யுரைகளை இந்த இரட்டையர்கள் நிகழ்த்தினாலும் - இனி இருக்கப் போவதும் - தொடரப்போவதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்கள் போல் - அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிபெறப் போவது தி.மு.க.தான் என்பதை பழனிசாமியும் - ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com