பணிமனைகளில் சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவுறுத்தினாா்.
அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் குறித்த அமைச்சரின் கேள்விக்கு, தமிழகம் முழுவதும் சாதாரணக் கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை 5,865-இல் இருந்து 7,321 ஆக அதிகரிக்கப்பட்டு, பெண்கள் எளிதில் பயணம் செய்யும் வகையில் இருப்பதாகவும், சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 62-ஆக உயா்ந்திருப்பதாகவும், மே 10-ஆம் தேதி வரை வரை பெண்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டுகள் 110.37 கோடி எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து அமைச்சா் அறிவுறுத்தியவை: சட்டப்பேரவையில் அறிவித்துள்ள அறிவிப்புகளை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பயணக் கட்டணம் தவிா்த்த இதர வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவும், பணிமனைகளில் சோலாா் ஒளி பலகைகள் அமைத்து மின்சாரம் தயாரித்தல், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.