சென்னை: செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரை ஓட்டி வந்த இளைஞர் பலியானார்.
தனியார் கல்லூரியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வரும் கபிலன் வந்த கார், எதிரே வந்த அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதையும் படிக்க.. என்ன, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கு மழை காரணமா?
அரசுப் பேருந்துடன் கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல நொறுங்கியது. இதில், காரில் வந்த கபிலன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக கபிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.