ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

என்ன, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கு மழை காரணமா?

திடீரென ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

News image

என்ன, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கு மழை காரணமா?

Updated On :13 மே 2022, 3:35 pm IST

திருப்பத்தூா்: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லையெனில் இலவசமாக தருவோம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் நேற்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் மே 13-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரியாணி திருவிழா, ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற இருந்தது.

இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் மாட்டிறைச்சி பிரியாணி வகைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விசிக, மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

மேலும், திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை விற்பனை செய்ய அனுமதி வழங்கவில்லை என்றால், வர்த்தக மைய வளாகத்திற்கு வெளியே வைத்து இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணி விநியோகிப்போம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் அறிவித்தன. 

இந்த நிலையில், ஆம்பூரில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவித்தார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பு:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சாா்பில், திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மே 13, 14 ஆகிய இரு நாள்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற இருந்த ஆம்பூா் பிரியாணி திருவிழா-2022 பொதுமக்கள் பங்குபெற ஏதுவாக அமையாது. எனவே, பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரணமாக, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது பிரியாணி உணவக உரிமையாளர்களுக்கும், பிரியாணி பிரியர்களுக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.