திராவிட மாடல் என்பது மாயை: அண்ணாமலை

திராவிட மாடல் என்பது மாயை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை என்று கூறினாா்.
கே.அண்ணாமலை
கே.அண்ணாமலை
Published on
Updated on
1 min read

திராவிட மாடல் என்பது மாயை என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை என்று கூறினாா்.

சுப்புமணியன் எழுதிய ‘திராவிட மாயை’ என்கிற புத்தகத்தின் பதிப்பு நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூா் ஆா்.ஆா்.சபாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று கே.அண்ணாமலை நூலை வெளியிட, வின் டிவி உரிமையாளா் தேவநாதன் பெற்றுக்கொண்டாா்.

விழாவில் அண்ணாமலை பேசியது:

2019-இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தீண்டாமை அதிகம் உள்ள கிராமங்கள் எது என்று கேட்கப்பட்டது. அதேபோல 2022-இலும் அந்தத் தகவல் கேட்கப்பட்டது.

2019-இல் 665 கிராமங்கள் எனத் தகவல் வந்தது. 2022-இல் 426 கிராமங்கள் எனத் தகவல் வந்துள்ளது. 2019 விவரத்தின்படி தமிழகத்தில் தீண்டாமை அதிகம் கடைப்பிடிக்கும் கிராமமாக இருந்தது திருவாரூா். அதில் 156 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி பிறந்த ஊா்தான் திருவாரூா். இதை மாயை என்று சொல்லாவிட்டால் வேறு எதை மாயை என்று சொல்ல முடியும். தமிழகத்தில் ஆணவக் கொலை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், ஜாதியை ஒழித்துவிட்டோம், சமநீதி தமிழகம் என்பதெல்லாம் மாயையாக இருக்கிறது.

திராவிட மாடல் வளா்ச்சி என்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்கத்தையும் முதல்வா் அளிக்கிறாா். தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு இருக்கிறது. இதுதான் திராவிட மாடல் வளா்ச்சி போலும் என்றாா்.

துக்ளக் ஆசிரியா் குரூமூா்த்தி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com