எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சுதந்திரமடைந்து முதல் முறையாக மே மாதத்தில்  மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறக்கப்படவிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பது இதுவே முதல்முறையாகும்.

News image

மேட்டூர் அணையில் 117 அடியை தொட்டுத் தளும்பிய நிலையில் காட்சி அளிக்கும் தண்ணீர்.

Updated On :6 பிப்ரவரி 2024, 6:16 pm IST

சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறக்கப்படவிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பது இதுவே முதல்முறையாகும்.

காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மே மாதத்தில் அணை திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை பாசனம் மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், கால்வாய் பாசனத்திற்கும் 17.32 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாட்களுக்கு 406.99 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படுகிறது.

Story image

இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 331.28 டி.எம்.சி.யும், வடகிழக்குப் பருவ மழை மூலம் 75.72 டி.எம்.சி. பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்ட 89 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 18 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12-க்குப் பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

Story image

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 1936 முதல் 1947 வரையிலான காலகட்டங்களில் 11 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக அணை திறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது இதுவே முதல்முறையாகும்.

முதல்வர் தண்ணீரை திறந்து விட்டார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை காலை 11.15 மணி அளவில் மதகுகளை இயக்கி குறுவை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 10,508 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை  நிலவரப்படி 117.76 அடியாக உள்ளது.

Story image

நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 89.94 டி.எம்.சி-யாக உள்ளது.

குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 125. 68 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை அணையிலிருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும் போது அணை மின்  நிலையத்தில் இருந்து 50 மெகா வாட், சுரங்க மின் நிலையங்களில் 200 மெகாவாட், 7  கதவணைகளில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.