குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
இதையும் படிக்க- ஐபிஎல் 2022: இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார்?
இந்நிலையில் கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார்.