பாமக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
பாமகவின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | ஆதார் நகலை யாரிடமும் கொடுக்க வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை
25 ஆண்டுகளாக பாமகவை வழிநடத்தி வந்த ஜி.கே. மணி கட்சியின் கௌரவத் தலைவராகச் செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்தார்.
கட்சியின் தலைவராக அன்புமணி அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாமக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். கௌரவத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜி.கே. மணியும் சந்திப்பின்போது உடனிருந்து வாழ்த்துகளைப் பெற்றார்.