அதிகனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிகக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பந்துவீச்சாளர்களைக் குறை கூறும் ரோஹித் சர்மா!
இதன் காரணமாக, செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஏற்கனவே திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.