பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

10 சதவீத இடஒதுக்கீடு... அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறதா அதிமுக?

சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (நவ.12) ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:19 pm IST


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீா்ப்பு தொடா்பாக, மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்பதற்காக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (நவ.12) ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிராக அமைவதுடன், சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானதாகும். 

இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில் வரும் சனிக்கிழமை (நவ. 12) காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளாா். பேரவையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா இரண்டு போ் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கபட நாடகம் என விமர்ச்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.