மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை 2-வது நாளாக வினாடிக்கு 15, 200 கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் நேற்று முன் தினம் மாலை வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது. நேற்று காலை வினாடிக்கு 15, 200 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை 2-வது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 15, 200 கன அடியாக நீர்வரத்து நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 33-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகஇருந்தது. மழையளவு 6.40 மி.மீ. ஆக பதிவானது.