தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

அண்ணாமலைப் பல்கலை தனி அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படவுள்ளதால், தனி அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள்.

Published On :1 பிப்ரவரி 2024, 4:25 pm IST

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படவுள்ளதால், தனி அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக தமிழக அரசு பல்கலைக்கழகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர 1928(1) என்ற சட்டத்தை திருத்த செய்து 2013 புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நிதி நெருக்கடியை சீரமைக்க பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Story image

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.

பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி சிக்கியுள்ளதால், மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து  பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் சுமார்  636 பேர் பணியாற்றுகின்றனர்.

தற்போது தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்களை பணியிறக்கம் செய்து, உதவி தனி அலுவலர்களாக புதிய நியமன உத்தரவு வழங்கப்படவுள்ளதாகவும்,  சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து தனி அலுவலர்கள் சங்கத்தினர் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் எங்களது ஊதியத்தை குறைக்கக் கூடாது. அதற்கு சமமான பணியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.