சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படவுள்ளதால், தனி அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக தமிழக அரசு பல்கலைக்கழகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர 1928(1) என்ற சட்டத்தை திருத்த செய்து 2013 புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் நிதி நெருக்கடியை சீரமைக்க பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.
பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி சிக்கியுள்ளதால், மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் சுமார் 636 பேர் பணியாற்றுகின்றனர்.
தற்போது தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்களை பணியிறக்கம் செய்து, உதவி தனி அலுவலர்களாக புதிய நியமன உத்தரவு வழங்கப்படவுள்ளதாகவும், சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தனி அலுவலர்கள் சங்கத்தினர் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் எங்களது ஊதியத்தை குறைக்கக் கூடாது. அதற்கு சமமான பணியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பல்கலைக்கழக பூமா கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் ஊடகர் கைது: காவல் துறை விளக்கம்!
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்! இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்!

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



