மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தாளாளர் மகன் புழல் சிறையில் அடைப்பு!

திருநின்றவூரில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:56 am

DIN

திருநின்றவூரில் பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருநின்றவூரில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இங்கு பிளஸ் 2 படிக்கும் இரு மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாகக் கூறி, பள்ளி தாளாளரின் மகன் வினோத் (34) பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக்குள் உள்ளிருப்புப் போராட்டம், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பட்டாபிராம் சரக காவல் உதவி ஆணையர் சதாசிவம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும், மாவட்டக் கல்வி அலுவலர் (மெட்ரிகுலேசன்) ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

7 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற பேச்சின் முடிவில் வினோத் மீது நடவடிக்கை எடுக்க திருநின்றவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், போலீஸார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வினோத் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தலைமறைவான வினோத்தை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். 

இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளரின் மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவை அடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வினோத். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.