பண்பற்ற கேள்வி: மன்னிப்புக் கோரியது சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கு விசாரணையின்போது, ஒரு பெண்ணிடம் வழக்குரைஞர் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்புக் கோரினார்.
பண்பற்ற கேள்வி: மன்னிப்புக் கோரியது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: வழக்கு விசாரணையின்போது, பெண் மனுதாரரிடம் வழக்குரைஞர் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி மன்னிப்புக் கோரினார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் இந்த சம்பவம் நடந்ததால், மன்னிப்புக் கோருவதாகவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பெண்களுக்கு தந்தையான நபர் மீது உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும், பாகப் பிரிவினை வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர் ஒருவர் குறுக்கு விசாரணை செய்த போது, பெண் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது பண்பற்ற முறையில் எழுப்பப்பட்ட கேள்வி என்பதால், நீதிபதி பரத சக்ரவர்த்தி மன்னிப்புக் கோரினார்.  குறுக்குவிசாரணை நடத்துவது மனுதாரர்களை அவமானப்படுத்தவோ, அவர்களது மனதில் காயத்தை ஏற்படுத்தவோ அல்ல என்று கூறியிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி, உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தைய படுகொலை செய்யும் வகையில் வழக்குரைஞர்களின் கேள்விகள் அமையக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

என்ன வழக்கு?
தருமபுரி மாவட்டத்தில் மணி என்பவரின் சொத்து பாகப்பிரிவினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்றது.

இந்த வழக்கில், குறுக்கு விசாரணை செய்த, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்குரைஞர், முதல் மனைவியின் மூன்று மகள்களுக்கும் தந்தை மீதான உரிமை குறித்தும், தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பினார்.

இதற்காக, வழக்குரைஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதற்காக, உயர் நீதிமன்றம் மன்னிப்புக் கோருவதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com