தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 5 பேருக்கும், செங்கல்பட்டு, கன்னியாகுமரியில் 4 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அளித்துள்ள தகவல்படி, மாநிலம் முழுவதும் தற்போது 268 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 50 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,55,770- ஆக உயா்ந்துள்ளது.