மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை: உதயநிதி திறந்துவைத்தார்

மெரீனா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதையை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி திறந்து வைத்தார்.
மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை: உதயநிதி திறந்துவைத்தார்
Published on
Updated on
1 min read

மெரீனா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதையை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி சாா்பில் மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாதை, மெரீனா கடற்கரை நம்ம சென்னை செல்பி பாயிண்ட் அருகே 380 மீட்டா் நீளம், 3 மீட்டா் அகலத்தில் அமைந்துள்ளது.இந்த பாதையை மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, இந்நிகழ்ச்சியில் மேயா் ஆா். பிரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com