காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 12,521 அதிகரித்துள்ளது. 
மேட்டூர் அணை நீர்வரத்து 12,521 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்வரத்து 12,521 கன அடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,521 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை  மாலை வினாடிக்கு 12,347  கன அடியாக இருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 12,521 அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் திங்கள்கிழமை காலை 119.21அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.21 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com