மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகம் வந்த பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநரிடம் பாஜக புகார்

செஸ் ஒலிம்பியாட் நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது மாநில அரசின் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :29 நவம்பர் 2022, 10:35 am

DIN


செஸ் ஒலிம்பியாட் நிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது மாநில அரசின் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் அளித்துள்ளார்.

44 செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் 12 நாள்கள் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 29ஆம் தேதி நடைபெற்றது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது, மாநில காவல்துறை வைத்திருந்த மெட்டல் டிடெக்டர் மற்றும் ஹேண்ட் டிடெக்டர் வேலை செய்யவில்லை என பாஜக குற்றம்சாட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை இன்று சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கக் கோரி மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்வில், மாநில அரசு வைத்திருந்த மெட்டல் டிடெக்டர், ஹேண்ட் டிடெக்டர் உள்ளிட்டவை சரியாக பராமரிக்காததால் பழுதடைந்து வேலை செய்யாமல் இருந்துள்ளது. பிரதமர் வந்து சென்ற பிறகு மத்திய நிறுவனங்கள் இதுகுறித்து மாநில அரசுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.

Story image

தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் செயல் குறித்து முறையான தணிக்கைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

மேலும், பிரதமரின் வீடுதோறும் குடிநீர் திட்டம் மூலம் தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழு நிதியில் மாநில அரசு அமல்படுத்தும் இந்த திட்டத்தில் கோடிக்கணக்கில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்தும் மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.