அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிக்க: கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.