1981-ல் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த பிரபலம்: யார் என்று தெரிகிறதா?

பலரும் தங்களது பழைய கால புகைப்படங்களை பகிர்ந்து, அதனுடன் இருக்கும் நினைவலைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
யார் என்று தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?

பலரும் தங்களது பழைய கால புகைப்படங்களை பகிர்ந்து, அதனுடன் இருக்கும் நினைவலைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.

பொதுவாகவே நட்சத்திர பிரபலங்கள் தங்களது சிறு வயது அல்லது குழந்தை வயது புகைப்படங்களைத்தான் பகிர்வார்கள். ஆனால் முன்னாள் அமைச்சர் ஒருவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது, தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவர் தான் 1981ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

அவர் யார் என்று இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கண்டுபிடிக்க முடிகிறதா என்று சற்று முயற்சியுங்கள். நீங்கள் சொன்ன பதில் சரிதானா என்பதைப் பார்க்கலாம்.

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் என்று கண்டுபிடித்திருந்தார். உங்கள் பதில் சரிதான்..

தமிழக மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், 1981ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் -1 கோவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தேர்வுக்காக விண்ணப்பித்த போது எடுத்த புகைப்படமாம் இது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com