ரயில் விபத்துகளைத் தவிர்க்க வேண்டி தண்டவாளத்திற்கு பூஜை செய்து ரயில்வே ஊழியர்கள் வழிபட்டனர்.
ஆயுத பூஜை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தங்கள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கும் பொருட்களுக்கும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் ரயில்வே ஊழியர்கள் சார்பில் ஆயுத பூஜை விழா அனைத்து ரயில் நிலையங்களிலும் கொண்டாடப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலைகளில் கீ மேன்கள் என்று அழைக்கக்கூடிய தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் தண்டவாளத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

ஒவ்வொரு தண்டவாளத்திற்கும் தேங்காய், பூ, பழம் வைத்து கற்பூரம் காட்டி ரயில் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ரயில் பாதையில் பயணிக்கும் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டியும் தண்டவாளத்திற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டினர்.
தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கி ஆயுத பூஜையை கொண்டாடினர். மேலும் தங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் திருநீரிட்டு குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதுபோல் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தண்டவாள பாதைகளில் இதுபோன்ற சிறப்பு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


