ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் என முன்னாள் எம்.பி.மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் மாற்றுக்கட்சியினர் பன்னீர்செல்வம் அணியில் இணையும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது, அனைவரையும் ஒருங்கிணைந்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும்தான் உள்ளது.
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் அழைத்து என்னை விசாரித்தார். பழனிசாமி அணியில் சேர்ந்த 108 நாள்களில் நான் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திரும்பியுள்ளேன் என்றார்.