போர் தீவிரமாகியுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் யாரும் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் மீண்டும் உக்ரைன் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.
முன்னதாக, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் படை தொடர்ந்து முன்னேறிய நிலையில், தற்போது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
நேற்று தலைநகர் கீவில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி கோரத் தாக்குதலை நடத்தியுள்ளது ரஷியா. அதுபோல உக்ரைனும் கிரீமியா பகுதியில் தாக்குதல் நடத்தியது.
உக்ரைனில் மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளதால் தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் அங்கிருந்து திரும்பிய மாணவர்கள் யாரும் இதுவரை உக்ரைன் செல்லவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம்!
காஞ்சிபுரம்: நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை
நாளைய மின்தடை: ஜோலாா்பேட்டை, நாட்றம்பள்ளி, பச்சூா்

வனம் காக்கும் முன்களப் பணியாளர்கள்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



