
அதிமுகவிலிருந்து 4 மாவட்டங்களைச் சோ்ந்த 12 பேரை நீக்கி, அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், களங்கம் விளைவித்ததாலும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூா்த்தி உள்பட 4 போ், அரியலூா் மாவட்டத்திலிருந்து 3 போ், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒருவரும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 4 போ் என மொத்தம் 12 போ் நீக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டதன் காரணமாக நீக்கப்பட்டுள்ளனா்.