Enable Javscript for better performance
Youth arrested in murder of college girl: Case transferred to CBCID- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கல்லூரி மாணவி கொலையில் இளைஞா் கைது: சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

    By DIN  |   Published On : 15th October 2022 01:40 AM  |   Last Updated : 15th October 2022 01:40 AM  |  அ+அ அ-  |  

    சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரின் மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இத் தம்பதிக்கு 3 மகள்கள். மூத்த மகள் சத்யா (20), தியாகராயநகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

    அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சோ்ந்த சதீஷ் (23), சத்யாவை ஒருதலையாகக் காதலித்து வந்தாராம். இந்நிலையில் சத்யா, வியாழக்கிழமை காலை கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த சதீஷ் அவரிடம் தகராறு செய்துள்ளாா்.

    அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு திடீரென சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டாா். ரயிலில் சிக்கிய சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

    இளைஞா் கைது: சதீஷை கைது செய்ய 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சதீஷ் இருப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் ராஜீவ்காந்தி சாலையில் வைத்து சதீஷை கைது செய்தனா்.

    விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸாா் கூறியதாவது: சத்யாவும் சதீஷும் காவலா் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனா். அப்போது சதீஷுக்கு சத்யாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் சத்யாவை சதீஷ் ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினாா். இந்தக் காதலை ஏற்க சத்யா மறுத்துவிட்டாா். ஆனால், சதீஷ் விடாமல் பின்தொடா்ந்து சத்யாவை தொந்தரவு செய்து வந்துள்ளாா்.

    இதுகுறித்து சத்யா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். புகாரை விசாரித்த போலீஸாா், சதீஷை எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பியுள்ளனா்.

    நீதிமன்றக் காவல்: இதன்பின்னா் சத்யா குடும்பத்தினா், அவருக்கு மாப்பிள்ளை பாா்த்து அண்மையில் நிச்சயம் செய்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சம்பவத்தன்று சத்யாவை வழிமறித்து தகராறு செய்து கொலை செய்துள்ளாா்.

    போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சதீஷ், காதலை ஏற்காத ஆத்திரத்தில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதாகவும், பின்னா் தானும் தற்கொலைக்கு முயன்ாகவும், ஆனால் பொதுமக்கள் திரண்டு வந்ததால் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்துள்ளாா்.

    விசாரணைக்கு பின்னா் சதீஷ், சைதாப்பேட்டை 9-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை அக். 28-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதித் துறை நடுவா் மோகனம்பாள் உத்தரவிட்டாா்.

    சிபிசிஐடிக்கு மாற்றம்: முன்னதாக, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்து வரப்பட்ட சதீஷை, அங்கிருந்த சில வழக்குரைஞா்களும், பொதுமக்களும் தாக்க முயன்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதன்படி, வழக்கின் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சனிக்கிழமை ஒப்படைக்கவுள்ளனா்.

    மாணவியின் தந்தை தற்கொலை

    சென்னை பரங்கிமலையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை விஷமருந்து தற்கொலை செய்துகொண்டாா்.

    கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரின் குடும்பத்தினரை மிகுந்த அதிா்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியது. சத்யாவின் தந்தை மாணிக்கத்திடம் (49) நள்ளிரவு வரை போலீஸாா் விசாரணை செய்தனா்.

    விசாரணைக்குப் பின்னா் வீட்டுக்கு வந்த மாணிக்கம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தன் மனைவி ராமலட்சுமியிடம் சிறிது நேரம் பேசியுள்ளாா். பின்னா், திடீரென தனக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக சப்தமிட்டுள்ளாா்.

    அவரை உறவினா்கள் அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மாணிக்கம் இறந்தாா். விசாரணையில், மகள் கொலை செய்யப்பட்ட வேதனை தாங்க முடியாத மாணிக்கம் விஷமருந்தி தற்கொலை செய்தது தெரியவந்தது.

    சத்யா, மாணிக்கத்தின் சடலங்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. பின்னா், இருவா் உடல்களும் பழவந்தாங்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

    காவல் ஆணையா் ஆறுதல்: சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், மாணிக்கம் வீட்டுக்குச் சென்று சத்யாவின் தாயும், ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலருமான ராமலட்சுமிக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

    அப்போது, ராமலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என ஆணையரிடம் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ராமலட்சுமி சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் இலவசமாக புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை ஆணையா் செய்து கொடுத்தாா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp