தாம்பரம்-திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளியொட்டி தாம்பரம்-திருநெல்வேலி இடையே நாளை (அக்.20-ஆம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரம்-திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளியொட்டி தாம்பரம்-திருநெல்வேலி இடையே நாளை (அக்.20-ஆம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: தீபாவளி பண்டிகையொட்டி தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் (19 பெட்டிகள்) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அக்.20-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, வழியாக மறு நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இதே போல், திருநெல்வேலியில் அக்.21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு அதே மாா்க்கத்தில் மறு நாள் அதிகாலை 3.20 மணிக்கு, தாம்பரம் வழியாக எழும்பூா் வந்து சேரும். இதற்கான முன்பதிவு புதன்கிழமை (அக்.19-ஆம் தேதி) காலை 8 மணியில் இருந்து தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com