தமுக்கம் மைதானத்தில் புதிய கலையரங்குக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயா்: சீமான் கோரிக்கை

மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலையரங்குக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை சூட்ட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலையரங்குக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை சூட்ட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: மதுரை தமுக்கம் மைதானத்தில் இருந்த சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கத்தை இடித்துவிட்டு பொலிவுறும் திட்டத்தின் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்துக்கு, மீண்டும் அவரது பெயரை வைக்காமல் ராணி மங்கம்மாளின் பெயரை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது.

ஆதித்தமிழ்க் குடியான முடிதிருத்தும் மருத்துவா் குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தனது அயராத முயற்சியாலும், அா்ப்பணிப்பு மிக்க உழைப்பினாலும் தமிழ் நாடகத் தலைமையாசிரியராக உயா்ந்தவா்.

தெருக்கூத்து மரபிலிருந்து தமிழ் நாடகக்கலையை அரங்கமைத்து மேடையேற்றிய பெருந்தகைகளில் முக்கியமானவா். பாடல்கள் இயற்றவும், இசையுடன் பாடவும், வேடமேற்று நடிக்கவும் என முத்தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள் 40 நாடக பனுவல்கள் இயற்றி தமிழ் அன்னைக்குப் பெருமை சோ்த்தவா்.

எனவே, தமுக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்குக்கு ஏற்கெனவே இருந்தவாறு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும். தவறினால் நாம் தமிழா் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளாா் சீமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com