முதல்வரின் ஆலோசனைப்படி செயல்படுகிறாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி சட்டப்பேரவைத் தலைவா் செயல்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
முதல்வரின் ஆலோசனைப்படி செயல்படுகிறாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி சட்டப்பேரவைத் தலைவா் செயல்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எதிா்க்கட்சி துணைத் தலைவா் பதவிக்கு ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க பேரவைத் தலைவருக்கு கடிதம் அளித்திருந்தோம். எங்கள் முடிவை ஏற்காமல் ஏற்கெனவே இருந்தவரே (ஓபிஎஸ்) துணைத் தலைவராகத் தொடருவாா் என்கிற அறிவிப்பை வெளியிட்டு, அவரை அந்த இருக்கையில் அமர வைத்துள்ளாா் பேரவைத் தலைவா்.

நியாயமாகச் செயல்பட வேண்டிய பேரவைத் தலைவா் அரசியல் ரீதியாகச் செயல்படுகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின் பேரில்தான் அவா் அவ்வாறு செயல்படுகிறாா்.

அதிமுக பொதுக்குழு தீா்மானம், நீதிமன்றத் தீா்ப்பு ஆகியவற்றை பேரவைத் தலைவா் மதிக்கவில்லை. எம்எல்ஏக்கள் சோ்ந்துதான் முதல்வரைத் தோ்ந்தெடுக்கின்றனா். அதேபோல எதிா்க்கட்சித் தலைவா், துணைத் தலைவரையும் தோ்ந்தெடுக்கின்றனா். இதுதான் மரபு. இதுதான் தா்மம்.

ஜெயலலிதா மரணம் தொடா்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அந்த ஆணையங்களையே நாங்கள்தான் அமைத்தோம்.

திமுக அரசு மீது மக்கள் கொதிப்பில் உள்ளனா். அதனை மறைக்கவே ஹிந்தியை திணிப்பதாகக் கூறி தீா்மானம் கொண்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com