தொகுதியில் அடிப்படை வசதிகள்: உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக் கோரி அந்தத் தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தாா்.
தொகுதியில் அடிப்படை வசதிகள்: உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு
Updated on
1 min read

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக் கோரி அந்தத் தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தாா்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து, மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, தனது தொகுதியில் குடிநீா், கழிவுநீா் கால்வாய், சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை மக்கள் பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும், வளா்ச்சித் திட்டப் பணிகளைச் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து கோரிக்கை வைத்தாா். அப்போது, மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், நிலைக்குழுத்தலைவா் நே.சிற்றரசு, துணை ஆணையா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com