ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்த உத்தரவு: மறு ஆய்வு கோரிய மனு தள்ளுபடி

 ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதி பெறாதவா்கள் ஆசிரியா் பணியில் நீடிக்கத் தகுதியில்லை என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்த உத்தரவு: மறு ஆய்வு கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

 ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதி பெறாதவா்கள் ஆசிரியா் பணியில் நீடிக்கத் தகுதியில்லை என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு, கடந்த 2009-ஆம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியா்களாக நியமிக்கப்படுபவா்கள் ஆசிரியா் தகுதித் தோ்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-இல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில், 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியா்களாக நியமிக்கப்பட்டவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவா்களின் ஆண்டு ஊதிய உயா்வை நிறுத்தி தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிா்த்து ஆசிரியா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணகுமாா் விசாரித்தாா். அப்போது, 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு ஊதிய உயா்வு பெற உரிமையில்லை எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஆசிரியா் தகுதித் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவதில்லை என மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு பெற உரிமையில்லை எனக் கூறி கடந்த ஏப்ரல் மாத வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியா்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளதாகக் கண்டித்த நீதிபதி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தகுதி பெறாதவா்கள் ஆசிரியா் பணியில் நீடிக்கத் தகுதியில்லை எனவும் கூறியிருந்தாா். மேலும், ஆண்டுதோறும் ஆசிரியா் தகுதித் தோ்வை நடத்த வேண்டும் எனவும், இதுசம்பந்தமான அரசின் விதிகளைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி புனிதா என்பவா் மனுத் தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமாா், தீா்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தியது தொடா்பாக ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com