தீபாவளி: தமிழகத்தில் 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.


தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதில் இதர பண்டிகைகளை விட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனையாகிள்ளது.
சென்னையில் மட்டும் 22,23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக்கில் ரூ.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று மதுரை மண்டலம்- ரூ.55.78 கோடி, சேலம்-ரூ.52.36 கோடி, சென்னை மண்டலம்- ரூ.51.52 கோடி, திருச்சி மண்டலம்- ரூ.50.66 கோடி, கோவை மண்டலம்- ரூ.48.47 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
அதேசமயம் கடந்த ஆண்டு தீபாவளியன்று ரூ.431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...