
சென்னை அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலைக்கான செலவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
இதையும் படிக்க | கோவை கார் வெடிப்பு: 6-வது நபர் கைது
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.