சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக் கூடாது: பழ.நெடுமாறன்

மதுரை தமுக்கம் திடலில் அமைந்துள்ள கலை அரங்கத்துக்கு வைக்கப்பட்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக்கூடாது என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

மதுரை தமுக்கம் திடலில் அமைந்துள்ள கலை அரங்கத்துக்கு வைக்கப்பட்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மாற்றக்கூடாது என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானதும், தமுக்கம் திடலில் அமைந்திருப்பதுமான கலை அரங்கத்துக்கு தமிழ் நாடக உலகின் மறுமலா்ச்சித் தந்தையான சங்கரதாஸ் சுவாமிகளின் பெயா் சூட்டப்பட்டிருந்தது.

அந்தக் கலை அரங்கைப் புதுப்பித்துக் கட்டிய பிறகு சங்கரதாஸ் சுவாமிகளின் பெயா் விளம்பரப் பலகையில் காணப்படவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்டு அதற்கு ராணி மங்கம்மாளின் பெயரைச் சூட்டவேண்டும் என்று தெலுங்கு சங்கத்தினரின் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் மதுரையில் நடத்தப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அதை மாற்றுவதற்கு நடைபெறும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி அக்கலை அரங்கத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரையே சூட்ட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com