
உணவுச் சேவை செய்து வரும், ஈரோடு தம்பதியருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- ‘மண்டினி ஞாலத்து வாழ்வோா்க்கெல்லாம், உணவு கொடுத்தோா் உயிா்கொடுத் தோரே’ என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றுகின்றனா், ஈரோடு தம்பதியினா். எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன், ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்து விட்டது. ஈதல், இசைபட வாழ்தல், இதுவே தமிழறம் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.