பண்டிகை காலம்: ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பண்டிகை காலக் கூட்டத்தை சமாளிக்க இன்று முதல் குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பண்டிகை காலக் கூட்டத்தை சமாளிக்க இன்று முதல் குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. 

பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

இதையடுத்து ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் ரயில் போக்குவரத்து சேவையை அதிகம் பேர் பயன்படுத்தும் பொருட்டு குறிப்பிட்ட ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. 

சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்படுகிறது. 

அதுபோல தாம்பரம் -நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com