திருநெல்வேலி: எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும் என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் முடிவு இருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம் என்றும், அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.