கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையிலான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பாதயாத்திரை புதன்கிழமை மாலை தொடங்குகிறது.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையில் சுமார் 3500 கி.மீ. நடைப்பயணத்தை 150 நாள்கள் மேற்கொள்ளவுள்ளார். இதில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 400 பேர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்விற்காக இன்று இரவு 8 மணிக்கு சென்னை வரும் ராகுல் காந்தி, நாளை காலை 7 மணிக்கு சாலை வழியாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு மண்டபத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை திரும்பும் ராகுல் காந்தி, காலை 11.40 மணியளவில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்.
கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் சிலைக்கு செல்லும் ராகுல் காந்தி, காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் உரையாடுகிறார்.
காந்தி மண்டபத்திற்கு அருகே ராகுல் காந்தியின் நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து சுமார் 700 மீட்டர் நடந்து சென்று பொதுக்கூட்ட மேடையை ராகுல் காந்தி அடையவுள்ளார்.
மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இதையும் படிக்க | எப்படி இருக்கிறது பெங்களூரு? கைகொடுக்கும் படகும் டிராக்டரும் - புகைப்படங்கள்
தொடர்ந்து கன்னியாகுமரியில் இரவு தங்கும் ராகுல் காந்தி, வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் நடைப்பயணத்தை தொடங்குகிறார். நாள்தோறும் காலை 4 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
பகல் நேரங்களில் உள்ளூர் அரசியல் தலைவர்களையும், மக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரவு நேரங்களில் அன்றைய பாதயாத்திரை நிறைவடையும் பகுதியிலேயே ராகுல் காந்தி தங்குகிறார்.
தமிழகத்தில் மொத்தம் நான்கு நாள்கள் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



