கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதிசெய்ய அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
இதையடுத்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்க அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், சமூக நலவாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது.