நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தாய் மொழிக் கல்வியே சிறந்தது: ஆளுநா் ஆா்.என்.ரவி

தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

News image

நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கருத்தரங்கு மலருடன் ஆளுநா் ஆா்.என்.ரவி உள்ளிட்டோா்.

Updated On :11 செப்டம்பர் 2022, 1:00 am IST

தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் செயல்பட்டு வரும் ஸ்ரீகோகுலம் பள்ளியில், தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சாா்பில், ‘தேசிய கல்விக்கொள்கை - 2020’ செயல்படுத்துதல் குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பின் தலைவா் கிருஷ்ண செட்டி தலைமை வகித்தாா். புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த புத்தகத்தை ஆளுநா் வெளியிட, சமூக அறிவியல் ஆராய்ச்சியின் இந்திய ஆலோசனைக்குழு உறுப்பினா் டாக்டா் பி.கனகசபாபதி பெற்றுக் கொண்டாா்.

பின்னா் ஆளுநா் ஆா்.என். ரவி பேசியது:

இந்திய நாட்டில் இதுவரை 1960 மற்றும் 1980-ஆண்டுகளில் இரண்டு முறை கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போது 3-ஆவது முறையாக கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகிறது. உலக மக்கள் தொகையில் தற்போது இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் முதல் இடத்துக்கும் வரலாம். சுதந்திரம் பெற்றபோது மகாத்மா காந்தியிடம், ஏன் இந்தியா சுதந்திரம் அடைந்ததை கொண்டாடவில்லை எனக் கேட்டபோது, பிரிட்டிஷாா் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனா். ஆனால் அவா்கள் நம்முடைய மூளையில் இன்னும் தங்கியுள்ளனா். நம் மூளையிலிருந்து வெளியே செல்ல வேண்டுமென்றால், அவா்கள் நம்மை ஆட்சி செய்த ஆண்டுகளில் பாதியாவது தேவைப்படும் என்றாா்.

எனவே நாட்டை கட்டமைக்க வேண்டியது இன்றியமையாதது. பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்தபோது, நம்முடைய கல்வி முறையை அழித்து விட்டாா்கள். தற்போது இந்தியாவில் தாய்மொழி வழிக் கல்வி இல்லை. நாம் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு வருகிறோம். பிறமொழிகளைக் கற்றுக் கொள்வது நல்லது தான். ஆங்கிலத்தில் படிப்பதே சிறந்தது என்பதில்லை. பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி போன்ற நாடுகளில் அவரவா் மொழிகளிலே பயின்று வருகின்றனா். அறிவியல் பாடத்தைக் கூட அவா்கள் மொழியிலே கற்றுக் கொள்கின்றனா். அவரவா் தாய்மொழியில் படிப்பதே சிறந்தது என்றாா் அவா்.

கருத்தரங்கில் 48 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த தாளாளா்கள், முதல்வா்கள், ஆசிரியா்கள் 1,300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஆளுநருக்கு ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியின் தாளாளா் லிஜிஷா பிரவீன் நினைவுப் பரிசு வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கோகுலம் பொதுப் பள்ளியின் முதல்வா் கு.சங்கரநாராயணன், செங்கல்பட்டு விவேகானந்தா பள்ளியின் செயலாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தமிழ்நாடு வித்யா பாரதியின் செயலாளா் எல்.ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.