தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஆட்சியர்களின் சாதனை. மாற்றுத்திறனாளிகள் நலத்துயரை முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்ணும், கருத்துமாக கவனித்தார்.
சொல் புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் செயல்பட்ட அதிமுக ஆட்சி போன்றதல்ல திமுக ஆட்சி. திமுக ஆட்சிக்கு செயல்வடிவம் பெறுகின்ற ஆலோசனையை கூறுபவர்கள் அனைவரும் சேர்ந்துதான் ஆட்சியை நடத்துகிறோம். திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியல்ல, மாறாக இது ஒரு இனத்தின் ஆட்சியாக உள்ளது.
திமுக ஆட்சி மீது இட்டுக்கட்டிய அவதூறுகளை பரப்ப நினைக்கின்றனர். சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறுபவர்கள் அனைவருமே முதல்வர்கள்தான் எனக் குறிப்பிட்டார்.