அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரை ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக் கேட்டு, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கபடவில்லை.
இது குறித்து பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மலையப்பாளையம்-அவிநாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: லடாக்கில் 2-வது நாளாக மிதமான நிலநடுக்கம்
இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.