தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தட்டச்சு தேர்வு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்துவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: நகைச்சுவையால் நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்கியவர் ஸ்ரீவத்சவா: மோடி
தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து பிரவீன் குமார் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.