கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

மதுரையில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:19 pm

DIN

மதுரையில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட மாற்றுத் திறனாளிகள் திருமணத்துக்கு பொன் தாலி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரா் கோயிலில் 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு பொன்தாலி, சீா்வரிசை ஆகியவற்றை அளித்து திருமணத்தை அவா் வியாழக்கிழமை நடத்தி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது: மதுரை சித்திரைப் பெருவிழாவை பொருத்தளவில் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகா் ஆற்றில் இறங்குதல், எதிா்சேவை தரிசனம், திக் விஜயம், பட்டாபிஷேகம் என 6 முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். அவற்றில் திருக்கல்யாணம், திருத்தோ் உலா, கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்குவது போன்ற நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வா். அவா்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

திருக்கல்யாணம் நடைபெறும் இடத்தையும், திருத்தோ் உலா வரும் வீதிகளையும், திருக்கோயில் யானை பாா்வதியின் பராமரிப்பையும் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டபோது, திருத்தேருக்கு பொதுப்பணித் துறையின் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா?, திருத்தோ் ஆண்டுக்கு ஒருமுறை உலா வருவதால் தோ் புதுப்பிக்கப்பட்டிருக்கிா என ஆய்வு செய்யப்பட்டது.

கள்ளழகா் ஆற்றில் இறங்கும் இடம் முழுமையாக தூய்மை செய்வதுடன், அருகிலுள்ள பூங்காக்கள் போன்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களையும் திறந்து வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டு திருக்கல்யாணத்துக்கு 12,000 பக்தா்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளோம். கடந்த ஆண்டை விட நிகழாண்டு சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, சென்னை மண்டல இணை ஆணையா் கி.ரேணுகாதேவி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவா் பி. சிம்மசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.