இணையதளங்களில் பொன்னியின் செல்வன் 2 வெளியிடத் தடை

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 
இணையதளங்களில் பொன்னியின் செல்வன் 2 வெளியிடத் தடை

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 

3,888 இணையதளங்களில் சட்டவிரோதமாக பொன்னியின் செல்வன் 2 படத்தை வெளியிடத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத் தயாரிப்பு நிறுவனமான லைகா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு, முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பார்த்த அனைவரும் ஒட்டுமொத்த படக்குகுழுவையும் பாராட்டி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com