சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலை பிரதமர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைப்பதாக தகவல் வெளியான நிலையில், தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ ரயிலின் முதல் சேவை 2019-ஆம் ஆண்டு தில்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னை- பெங்களூரு, சென்னை சென்ட்ரல் - கோவை ஆகிய 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: 12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து: தெற்கு ரயில்வே
இந்நிலையில், தமிழகத்தின் 3- ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருநெல்வேலி- சென்னை எழும்பூா் இடையே ஆக. 6-ஆம் தேதிமுதல் இயக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அதற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.