விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஆக.6-ல் தொடங்கப்படாது: ரயில்வே விளக்கம்

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஆகஸ்ட் 2023, 5:38 am

DIN

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலை பிரதமர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடக்கி வைப்பதாக தகவல் வெளியான நிலையில், தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ ரயிலின் முதல் சேவை 2019-ஆம் ஆண்டு தில்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னை- பெங்களூரு, சென்னை சென்ட்ரல் - கோவை ஆகிய 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் 3- ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருநெல்வேலி- சென்னை எழும்பூா் இடையே ஆக. 6-ஆம் தேதிமுதல் இயக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அதற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.