நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாமக்கல் காசி விஸ்வநாதர் கோயிலில் திரளானோர் வழிபாடு!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் காவிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2023, 6:44 am

DIN

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி பிறந்துவிட்டாலே விவசாயிகளும், பொதுமக்களும், பக்தர்களும் மிகுந்த உற்சாகமாகி விடுவது வழக்கம். காவிரியில் தண்ணீரின் அளவு அதிகரித்து விவசாயம் செழிப்பதோடு, கோயில்களில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். 

Story image

ஆடி 18 அன்று தங்களது கோயில்களில் உள்ள குல தெய்வத்தின் ஆயுதங்களை எடுத்து வந்து காவிரியில் சுத்தம் செய்தும், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செய்தும், சிறப்பு பூஜைகளை செய்தனர். பெண்கள் ஆடி 18 பண்டிகையன்று 18 நாள்கள் வீட்டில் முளைக்க வைக்கப்பட்ட நவதானியங்களான முளைப்பாரியை கொண்டு வந்தனர். பின்னர் குடும்பத்தினர், புதுமணத் தம்பதிகள் ஆகியோர் தங்களது தலையில் காசுகளை வைத்து காவிரியில் குளித்து பூஜைகள் செய்து தங்களது முன்னோர்களுக்கும், கன்னி தெய்வங்களுக்கும், காவிரி தாய்க்கும் நன்றி செலுத்தும் வகையில் வாழை இலையில் காதோலை, கருகமணி, தேங்காய் பழங்கள், வெற்றிலை, பாக்கு, காப்பரிசி, புத்தாடை, மஞ்சள் தடவிய நூல் மற்றும் முளைப்பாரிகள் ஆகியவற்றை படைத்து வணங்கி பின்னர் அந்த முளைப்பாரிகளை ஆற்றில் விட்டனர். 

Story image

பிற்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது குல தெய்வ கோயில்களில் உள்ள ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்தனர். பின்னர் அருள்வாக்கு வந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று அதிகாலை முதலே நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் காவிரி ஆற்றில் குளித்து ஆடி பதினெட்டு பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு கருவி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.