தமிழ்நாடு
மீனவர்களுக்கு ஆக. 21 வரை நீதிமன்ற காவல்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்திலிருந்து மீனவர்கள் பலர் விசைப்படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் திரிகோணமலையில் வைத்து, ஒரு படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், அந்தப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் திருகோணமலை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.