தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

வெள்ளக்கோவில் அருகே காட்டன் மில்லில் தீ விபத்து 

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காட்டன் நூல் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

Updated On :9 ஆகஸ்ட் 2023, 11:40 am IST

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காட்டன் நூல் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில் காங்கயம் சாலையைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் நகரத்துக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் ஆரோக்கியா டெக்ஸ்டைல்ஸ் என்கிற ஓபன் எண்ட் காட்டன் நூல் மில் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் மில் இயங்கிக் கொண்டிருந்த போது புதன்கிழமை காலை மின்சாரக் கோளாறு காரணமாக மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. 

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

அதற்குள் மில்லின் சில பகுதிகள் தீயில் கருகிச் சேதமடைந்தன. தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை. வெள்ளக்கோவில் போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.