மதுரை எய்ம்ஸ்: கட்டுமானத்துக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் வரைபடம்(கோப்புப்படம்)
மதுரை எய்ம்ஸ் வரைபடம்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து 2019 ஜனவரியில் எய்ம்ஸ் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியும், விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் டெண்டருக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், கட்டுமானப் பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com